தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடு கூட தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ”மனிதனுக்கு நாக்கு என்று ஒன்று இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி 2 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் கூட்டணி இல்லை என்று சொன்னார். தற்போது தி.மு.க மட்டும் தான் எதிரி என்று கூறுகிறார். நல்லதுதான். எடப்பாடி பழனிசாமி எத்தனை பேரை சேர்த்துக் கொண்டு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி உறுதியோடு இருக்கிறது. 2026 தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
வட மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் முன்மொழி கொள்கை உள்ளது. பல மொழிகள் அழித்து இந்தி எப்படி உருவானது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்தி பேசும் இந்தியா முழுவதும் கிடையாது. தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடு கூட தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தொகுதி மறுசீரமப்பை எதிர்ப்து போல் மும்மொழிக் கொள்கையையும் தென் மாநிலங்கள் எதிர்க்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வருவது ஒன்றிய பா.ஜ.க அரசுதான். அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டயி அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்கவில்லை. 10 மாநிலங்களை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வர முடியும் என்று பா.ஜ.க பகல் கனவு கண்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









