விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடன் அமைச்சர் ஆலோசனை..

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, “விருதுநகர் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி முதல் படிப்படியாக பட்டாசு தொழில் அச்சகத் தொழில் ஸ்பின்னிங் மில் மற்றும் சிறு கடைகள் வணிக நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் பேருந்தில் செல்லும்போது இடைவெளி விட்டு அமரவேண்டும் தொழிற்சாலைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் ஊழியர்களுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சென்னையில் பால் தட்டுப்பாடு கிடையாது. ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உரிய பாதுகாப்புடன் பாலை கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு விநியோகம் செய்கின்றனர்.

நோய் தொற்று இல்லாத சுகாதாரமாக சிறப்பாக பணியாற்க்கூடிய பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை“ என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!