திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (JAMBOREE) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா (28.01.2025) அன்று முதல் 03.02.2025) வரை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று (19.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அருகில், மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர் அறிவொளி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.