கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் தேர்வு விடுமுறைக்கு பின்பு வருகின்ற ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளிகள் துவங்க உள்ளதால் தூய்மைப் பணி மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை நகராட்சி ஆணையாளர் அமுதா பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைகளின்
படியும், மேட்டுப்பாளையம்
நகராட்சிப்பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்திலும் தூய்மைப்பணிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை நகராட்சி ஆணையாளர் அமுதா ஆய்வு செய்தார்
வருகின்ற ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து நகராட்சி பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன இப்பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார்
நிருபர் சாமுவேல்