சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்..
சென்னை எண்ணூர் கடற்கரையில், கல்லூரி மாணவி உட்பட நான்கு பெண்களின் உடல்கள் ஒரே நேரத்தில், கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
நான்கு உடல்களையும் மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஷாலினி (வயது -18) என்பவர் தனியார் கல்லூரி மாணவி என்றும், தேவகி பவானி காயத்ரி ஆகிய 3பேரும் ஜவுளிக்கடையில் பணியாற்றுபவர்கள் எனத் தகவல்.
ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் 4-பேரும் சென்றதால் கடல் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும்,கற்கள் அதிகம் உள்ளதால் இறந்தவர்களின் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்?

