இஸ்லாமிய கூட்டமைப்பினர் – வைகோ சந்திப்பு…தற்போதய சூழலில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறு தாக்குதலை கண்டித்து குரல் கொடுக்க கோரிக்கை..

என்.ஐ.ஏ.சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைகோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

ஜமாத்தின் மாநில செயலாளர் SN. சிக்கந்தர், “23 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் வைகோ அவர்களுக்கு வாழ்த்தினையும், என்.ஐ. ஏ மூலமாக கைது செய்யப்படும் அப்பாவி இளைஞர்கள் உடைய நிலைமையையும்” எடுத்துக் கூறினார்.

“ஹிட்லர் முசோலினி ஆகியோரின் முடிவுகள் நமக்கு தெரியும். பயப்பட வேண்டாம். நாம் தொடர்ந்து களமாடுவோம் இன்ஷா அல்லாஹ். நீங்களும் எனக்காக துவா செய்யுங்கள்” என்று வைகோ நெகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!