உசிலம்பட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க பொதுக்கூட்டம்..

உசிலம்பட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அனைத்து அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஜனவரி 8, 9 வேலை நிறுத்ததிற்கான விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அனைத்து அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஜனவரி8,9 வேலைநிறுத்ததிற்கான போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள்க, கை ப்பை அள்ளும் தொழிளாலர்கள், மோட்டார் ஆப்ரேட்டர்கள் என அனைத்து அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்கள் ஊழியர்களுக்கு போராட்டத்தைப் பற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் செல்லக்கன்னு தலைமைதாங்கி விளக்கினார். இதில் சிஐடியு மாநிலச்செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!