உலக தியான தினம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் உலக தியான தினம் கடைப்பிடிக்கப்பட்டது .பள்ளி தாளாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரம்ம குமாரிகள் மதுரை அமைப்பினை சேர்ந்த சகோதரி ஆசா கலந்து கொண்டு உலக தியான தினத்தின் முக்கியத்துவத்தை சொல்லி ,மாணவர்கள் உலக அமைதிக்காகவும் மன அழுத்தத்தை குறைத்திடவும் தியான பயிற்சியை கற்றுக் கொடுத்தார்கள்.இன்றைய தினம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நிறைவாக பிரம்ம குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் சகோதரர் பாலமுருகன் நன்றி கூறினார்.

உசிலை மோகன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!