தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இலவச கண் ஆலோசனை முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்கள் பலர் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் ஆலோசனை முகாமினை கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் துவக்கி வைத்தார். முகாம் காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் பொது மக்கள் பலர் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையினை பெற்று பயனடைந்தனர். இந்த ஆலோசனை முகாமில் சுகாதார ஆய்வாளர் பிச்சையா பாஸ்கர், சுகாதார அலுவலர் சிவா மற்றும் அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் திமுக நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் ஜாஹிர் உசேன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









