கீழக்கரையில் சக்கரை நோயாளிகளுக்கான மாபெரும் கண் பரிசோதனை முகாம்..

கீழக்கரையில் இன்று (17-12-2017) காலை 9.00 மணி முதல் ஹைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தங்கமயில் ஜுவல்லரி இணைந்து நடத்தி வரும் கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பரிசோதனை முகாமில் உடனடி சக்கரை அளவு பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த முகாமிற்கு காலை முதலே ஆண்களும், பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!