கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் அந்த பகுதியில் ஒரு கடை நடத்தி வருகிறார். 28.01.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த சக்தி @ சக்தி ராஜன்(22) என்பவர் மணிகண்டனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மணிகண்டன் தர மறுக்கவே ஆத்திரமடைந்த சக்தி ராஜன் இரவு மணிகண்டன் கடையை அடைத்த பின்பு கடைக்கு தீ வைத்துவிட்டார். தகவல் அறிந்த மணிகண்டன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் அணில்குமார் சக்தி ராஜனை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









