பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மன்னராட்சிக்கு உட்பட்ட எல்லிஸ் நகர் 16-ஆவது வார்டு சர்வோதயா நகர் சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறு ஓடுகிறது.  இதனருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளி அருகேயே கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!