கழிவுநீர் தொட்டியில் விழுந்த காளை மாடு

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே கழிவுநீர் தொட்டியில் ஒரு காளைமாடு விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சுமார் 3 மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர் .மேய்ச்சலுக்கு சென்ற மாடு தவறி விழுந்தது. அதை காப்பாற்றிய துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!