மதுபோதையில் சாக்கடையில் விழுந்த வாலிபர் மீட்ட தீயணைப்பு துறையினர்.

மதுரை காளவாசல் அருகே மது போதையில் நடந்து சென்ற வாலிபர் போதை தலைக்கேறியதால் நிலைதடுமாறி காளவாசல் அருகே உள்ள சாக்கடை வாய்க்காலில் விழுந்தார். பொதுமக்களை அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மீட்க முடியவில்லை. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது போதையில் விழுந்து கிடந்த வாலிபரை கயிறை கட்டி மீட்டனர். பின் அவர் அருகில் உள்ள நபர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி கழுவி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் இதனால் காளவாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!