மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் பூஜைகள் செய்தார் இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டு சென்றனர்


You must be logged in to post a comment.