தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது இந்நிலையில், 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் பரவலாக பலத்த மழை பெய்தது. மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் இதற்கிடையே மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது இது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது ஆந்திர கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு அது மேற்கு வடமேற்காக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


You must be logged in to post a comment.