சோழவந்தான் அருகே மேலக்காலில் ஆயுர்வேத மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் கிராமத்தில் ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் மாவட்ட சித்தா மருத்துவர் அன்னகாமு வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் முன்னிலை வகித்தனர் மேலக்கால் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன் ராதாகிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவர்கள் கணேஷ் சேக் பரீத் சித்தா மருத்துவர்கள் முத்து சுரேஷ்பாபு நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய பிரிவு வக்கீல் முருகன் சி பி ஆர் சரவணன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் பி ஆர் சி ராஜா இளைஞர் அணி பால்கண்ணன் கலைஞர் முருகன் சுபேத வாகனம் ஊத்துக்குளி ராஜா திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் நீலமேகம் மருத்துவ அலுவலர்கள் பணியாளர்கள்
மற்றும் மேலக்கால் திமுக கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!