உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக தேவர் சிலை அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 81 வது பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி . சரவணகுமார் தலைமையில் சேடபட்டி வட்டார தலைவர்கள் புதுராஜா, ஜெயராஜ் செல்லம்பட்டி வட்டார தலைவர் செந்தில் உசிலம்பட்டி வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன் ஆகியோர் முன்னிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகரத் தலைவர் பாண்டிஸ்வரன் நகரச் செயலாளர் தினகரன் முன்னாள் நகர தலைவர் காந்தி சரவணன் ஐ. என். டி. யூ. சி நிர்வாகிகள் பிரேம் ஆனந்த், செந்தில் குமார் முன்னாள் மாவட்ட செயலாளர் எல். விஜயகாந்தன் வட்டார துணைத் தலைவர்கள் தமிழ் மாறன், நாகராஜன், செல்வம் , வர்த்தக பிரிவு ரவி சேவாதளம் தொண்டர் முருகேசன் ,பெரிய சாமி, கிருஷ்ண மூர்த்தி, மகளிர் அணி அழகம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
You must be logged in to post a comment.