சோழவந்தானில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளை ஒட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் ஆளுநர் ஸ்ரீமான் வழிகாட்டுதலின்படி மதுரை சோழவந்தான் பகுதியில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செந்தூர்பாண்டியன் இளைஞர் அணி தலைவர் ஹரி மா.த. நாகு ஆச்சாரி பொதுச் செயலாளர் கருப்பசாமி மதுரை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை மாவட்ட பிரதிநிதி ஆனந்தன் மாவட்ட கிராம வளர்ச்சித் துறை தலைவர் சோழவந்தான் காவல்துறை அதிகாரிகள் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பாஜக மூத்த நிர்வாகி மாயாண்டி முருகேஸ்வரி தும்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!