மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே எம் எஸ் தொண்டு நிறுவனம் சார்பாக இருசக்கர வாகனத்தில் தலை கவசத்துடன் வருபவருக்கு மரக்கன்று மற்றும் டிபன் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது.

உசிலம்பட்டியில் போக்குவரத்து விழிப்புணர்வை முன்னிட்டு சாலை பாதுகாப்பை மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் தலை கவசத்துடன் வருபவர்களுக்கு மரக்கன்று டிபன் பாக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. எம் எஸ் தொண்டு நிறுவனம் மணிகண்டன் மற்றும் நிவேதா தலைமையில் காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். காவல்துறை சார்புஆய்வாளர் பாண்டியராஜன் போக்குவரத்து துறை சார்பு ஆய்வாளர் பாண்டியமன்னன், கிருஷ்ணா மூர்த்தி, முத்துகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் அருவகொடி, தினேஷ் குமார், பாண்டி , பூபாலாசந்திரன், இன்பராஜா ஆகியோர் கலந்து கொண்டு சாலையில் தலைக்கவசத்துடன்இரு சக்கர வாகனத்தில் வருவர்களிடம் பரிசாக மரக்கன்று மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.