கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா நடைபெற்றது அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராபின்சன் செல்வகுமார் வரவேற்றார். பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சுமார் 25 ஆயிரம்ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள் மதுரை எல்ஐசி வளர்ச்சி அதிகாரி முத்துராமன் ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் நன்கொடையாக வழங்கினார்கள் வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கி இனிப்புகளை வழங்கினார். முத்துராமன்,ஜோயல் ராஜ், உதவி ஆசிரியைகள் பிரேமா அன்னபுஷ்பம், பிரேம் குமாரி, வனிதா சாந்தகுமாரி ஆகியோர் பேசினர். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!