மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார். எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். சோழவந்தான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருநாவுக்கரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் போதை குறித்த அறிவுரைகளை வழங்கினார். மாணவ மாணவியர் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை தீபா ராகினி நன்றி கூறினார்

You must be logged in to post a comment.