மதுரை மாவட்டம் கள்ளர் சீரமைப்பின் அனைத்து ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை கள்ளர் சீரமைப்பு கூட்டமைப்பு சார்பில் இணை இயக்குனர் முனிசாமியை சந்தித்து கள்ளர் சீரமைப்பில் காலியாக உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை. மதுரை மாவட்ட கள்ளர் சீரமைப்பு அனைத்து ஆசிரியர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சு.ரா.கணேசன், இரா.வியராஜ், சிவ.ராஜேந்திரன், இரா.மரியசெல்வம் நந்தகுமார், சத்யம் ஆகியோர் கலந்துகொண்டு கள்ளர் சீரமைப்பு துறை இயக்குனர் முனிசாமி இடம் கோரிக்கை மனு வழங்கினர்.
2022 ல் பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவரை முறை செய்திடவும்,
உசிலம்பட்டி உத்தமபாளையம் சரகங்ளுக்கு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் நியமித்திடவும் கோரிக்கை வைத்தும் மேலும் கள்ளர் சீரமைப்பில் வெளிப்படையான ஊழற்ற நிர்வாகத்திற்கு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.