இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி தாலுகா 25 ஆவது மாநாடு உசிலம்பட்டி சந்தை தேவர் மகாலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சின்னா தேவர் கொடியேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாநில கட்டுப்பாட்டு குழு பி காளிதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில செயற்குழு தீ ராமசாமி
மாவட்ட செயலாளர் பி முத்துவேல் விவசாய தொழிலாளர் சங்கம் விருமாண்டி என். ஜீவானந்தம் கலந்து கொண்டனர் . மாநாட்டில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உசிலம்பட்டி தாலுகா செயலாளர் ஆர் தங்கமலை துணைச் செயலாளர்கள் ஆர் ஜெயக்குமார் , ஈஸ்வரி பொருளாளர் வி ராமர் தேர்வு செய்யப்பட்டார்கள். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.