

உசிலம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு
மதுரை மாவட்டம் மதுரை மெயின்
ரோட்டில் உள்ள சிக்கம்பட்டியில் மாயன் நகர் பகுதி நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் உள்ளது.இந்த ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற உசிலம்பட்டி மண்டல துணை வட்டாட்சியர் அல்காபூதின், உத்தப்பநாயக்கனூர் வருவாய் ஆய்வாளர் முத்துகுமார் மேக்கிழார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவாஸ்கர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் மேக்கிழார் பட்டி ஊராட்சி சிக்கம்பட்டி மாயன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்தனர். மேலும் இடத்தை அளப்பதற்கு வந்த வருவாய் துறையினரையும், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார்களையும் தடுத்து மாயன் நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வருபவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜே.சி.பி., வாகனத்தை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் மற்றும் இடம் உரிமையாளர்கள் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் இடத்தை அளப்பதற்கும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கும் ஏழு நாள் கழித்து வந்து இடத்தையும் மற்றும் ஆக்கிரமிப்பையும் அகற்றிக் கொள்வதாக முடிவு செய்தனர்.
