
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் வழங்க நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.,
அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மதுரை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஓ.பி.எம். விஜய் தலைமையிலான நிர்வாகிகள் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், அத்திபட்டி, மொக்கத்தான் பாறை, வ.கல்லுப்பட்டி, வாலாந்தூர், போலியம்பட்டி, ஆனையூர், கட்டக்கருப்பன்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.,
இந்த அன்னதான நிகழ்வில் கோழி பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி தவெக நிர்வாகிகள் வழங்கினர்.,இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மதன்குமார் மற்றும் ராஜா,பிரவீனா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.