உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் பெண்கள் பொங்கல் பானை ஊர்வலம்

உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தெப்பத்து கருப்பசாமி கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் பூதவாகனத்தில் எழுந்தருளினர். பெண்கள் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து பொங்கல் வைத்து திருவிழாவில் கலந்து கொண்டனர். வைகாசி பொங்கல் திருவிழாவில் பத்திரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாரதனை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!