மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் தேவர் மகாலில் மதுரை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் உசிலம்பட்டி ஒன்றிய ஐந்தாவது மாநாடு நடைபெற்றது.
உசிலம்பட்டி ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் ஐந்தாவது மாநாட்டில் மாவட்ட தலைவர் தவமணி தலைமையில் மாவட்ட செயலாளர் வி. முருகன் மாவட்ட பொருளாளர் பாண்டியன் உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் நாகராஜ் செயலாளர் சின்னச்சாமி பொருளாளர் வீரையா ஆகியோர் முன்னிலையில் சி பி எம் ஒன்றிய செயலாளர் ராமர் மற்றும் உசிலம்பட்டி ஒன்றிய பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானமாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித் தொகையைப் போல தமிழ்நாட்டில் உதவித்தொகையை கூட்டி அதிகமாக வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
You must be logged in to post a comment.