மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் அய்யனாரின் குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில் தீயணைப்புத் துறையின் மதுரை மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் பிளஸ் ஒன் மாணவனின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார் நிகழ்ச்சியில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்

You must be logged in to post a comment.