உசிலம்பட்டியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ண தேசிய கொடி பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக மூவர்ணக் தேசிய கொடி பேரணி நடைபெற்றது.

ஜம்முவில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்த்து அழித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை ரோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் மாவட்டப் பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலையில் நகரத் தலைவர் சௌந்தரபாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே பி கே வீர பிரபாகரன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தீபன் முத்தையா பிரகாஷ் ராக்கப்பன் தினகரன் சிவமுருகன் ஞானப்பழம் மாத்தூரான் பிரசாத் கண்ணன் மதன் நாகராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் மலர்க்கொடி இன்பராணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஊர்வலமாக வந்து தேனி ரோடு முருகன் கோவில் முன்பாக தேசிய கொடி யாத்திரையை நிறைவு செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!