லஞ்சம் கேட்கும் நிருபர்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் முடிவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகிய இருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பத்திரிக்கை நிருபர்கள் எனக் கூறி சிலர் ஊராட்சி செயலாளர்களிடம் 100 நாள் வேலைகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் அது குறித்து புகார் வந்துள்ளதாக கூறி செய்தி வெளியிடாமல் இருக்க தங்களை கவனிக்க வேண்டும் என பேரம் பேசி வருவதாகவும் ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!