மதுரை மாவட்டம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி வட்டார வள மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் .அ.ரேணுகா அவர்கள் வழிகாட்டுதலின் படி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ அளவீட்டு மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும் மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமி நாதன் ,மற்றும் பெ.பாரத் குமார் செயல் திறன் உதவியாளர் அறிவுறுத்தலின் படி வட்டாரக் கல்வி அலுவலர்கள் திலகவதி மற்றும் தேவி , முன்னிலையிலும் நடைபெற்றது .மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரிய கலா , வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ், உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, சிறப்பு பயிற்றுநர் மு.மகேஸ்வரன் மற்றும் இயன் முறை மருத்துவர் கா.இராஜேஸ்வரி கலந்து கொண்டனர் இம் மருத்துவ மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அளவீட்டு மதிப்பீடு முகாமில் உசிலம்பட்டி, சேடபட்டி,செல்லம்பட்டி,கல்லுபட்டி,மற்றும் கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 44 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

You must be logged in to post a comment.