சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு வரவேற்பு

கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு சோழவந்தானில் வரவேற்பு அளிக்கப்பட்டது சோழவந்தான் மாரியம்மன் கோவில் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த பயணக் குழுவில் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன், டைபி மாநில செயலாளர் சிங்கார வேலன் , ஏ ஐ டி டபுள்யூ ஏ மாநில செயலாளர் ராதிகா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கந்தவேல் சின்னச்சாமி, பொன்ராஜ். கருப்புசாமி விவேக் உட்பட போக்குவரத்து கமிட்டி சேகர், கணேசன் ஏராளமானோர் பங்கேற்றனர். தியாகிகள் குறித்து விளக்கம் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டு நிகழ்வுகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!