துரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அன்னம்பார்பட்டி 3வது வார்டைச் சேர்ந்தது நீராவி மேட்டுத்தெரு மற்றும்; மொக்கராஜ் தெரு.இத்தெருக்களில் அன்னம்பார்பட்டி வத்தலக்குண்டு ரோட்டிலுள்ள மண்டபங்களில் வெளியேறும் கழிவு நீர் மற்றும் தெருக்களில் தேங்கும் நீர் ஆகியவை நீராடு மேட்டுத் தெருவில் தேங்குவது வழக்கம்.ஆரம்பத்தில் சில நாட்களில் தண்ணீர் வற்றி விடும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீரும் கழிவு நீரும் குளம் போல் தேங்கியுள்ளது.சில சமயங்களில் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றிய நகராட்சி நிர்வாகம் அதன் பின் கண்டுகொள்ளவில்லை.இதனால் கடந்த 5 மாதங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி தற்போது ஆகாயத்தாமரை வளர்ந்து காணப்படுகின்றது.
இந்த கழிவு நீர்; வீடுகளுக்குள் புகுந்ததால் அத்தெருவில் வசித்து வந்த 10க்கும் மேற்பட்ட சலவைத்தொழிலாளர்களின் குடும்பங்கள் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து வேறு பகுதிகளில் தஞ்சமடையும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது.மேலும் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் அவசதத்திற்கு 108 ஆம்புலன்ஸ்-பள்ளிக் கூட வேன்கள்-ஆட்டோ-கேஸ் சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் போன்றோர் தண்ணீரை காரணம் காட்டி இத்தெருக்களில் வருவதில்லை.மேலும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் இத்தெருக்களில் மாலை 5 மணிக்கு மேல் தெருக்களில் யாரும் நடமாடுவதில்லை.வீடுகளில் கதவை பூட்டிக்கொண்டு இருப்பவர்கள் காலை 7 மணிக்கே கதவைத்திறந்து வெளியில் நடமாடுகின்றனர்.பள்ளிக்குழந்தைகள் டியூசன் செல்ல முடியாமலும் தெருக்களில் விளையாட முடியாமலும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.இதனால் உசிலம்பட்டியில் தனித் தீவு போல் 3வது வார்டு காட்சியளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உசிலம்பட்டி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பினால் கழிவு நீர்; செல்ல வழியில்லை என்றும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.கடந்த 2 வருடங்களாக இப்பிரச்சனை உள்ளதாகவும் இது குறித்து கோட்டாச்சியர் சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலமுறை மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லையென்றால் கடந்த 5 மாதமாக நரக வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிக்குள் தனித்தீவு போல காட்சியளிக்கிறது இந்த 3வது வார்டு.
You must be logged in to post a comment.