மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள மருது பெட்ரோல் பங்க் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா தலைமை வகித்தார். எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் விற்பனையை துவக்கி வைத்தார். நிர்வாகி வள்ளிமயில் வரவேற்றார். இதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அரிமா சங்க நிர்வாகிகள் வாடிப்பட்டி வட்டார அடகுகடை சங்க நிர்வாகிகள், கலைவாணி பள்ளி பெற்றோர் ஆசிரியர் ஆசிரியர்கள் நண்பர்கள் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது

You must be logged in to post a comment.