சோழவந்தானில் தி ஐ பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் மதுரை அண்ணாநகர் தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவர் விசாலாட்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் பிரின்ஸ் இம்மானுவேல், மோகனா ,தினகரன், ஆகியோர் கண்பார்வை குறைபாடுகள் ,ரத்த அழுத்த பரிசோதனை ர்த்தத்தில் சர்க்கரை அளவு, கண் புரை, கண் சதை வளர்ச்சி, கண்ணில் நீர் அழுத்தம் ,ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் பாண்டியன் மற்றும் சிவ பாலன் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!