மதுரை-மூடப்படாத குழியால் விபத்து ஏற்படும் அபாயம்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வார்டு சாலையில் உள்ள சிவகாசி நாடார் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இது சரியாக மூடப்படாத தால் அங்கே வரும் பள்ளி மாணவ மாணவிகள் அதில் கீழே விழுந்து இன்று 13.11.19 காலை ஒரு மாணவன் கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பள்ளி வளாகம் அருகே மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அங்குள்ள மழை நீரை அகற்றி தோண்டப்பட்ட பலத்தை சரியாக முறையில் மூடி கால்கள் மேலே தெரியாத அளவிற்கு சமப்படுத்த வேண்டும் எனவும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!