சோழவந்தானில், இளைஞர் காங்கிரஸ்சார்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

 மதுரை மாவட்டம்சோழவந்தான் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரை இழிவாக பேசிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் வருசை முகமது தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் குருசாமி தொடங்கி வைத்தார். மகிளா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன் முன்னிலை வகித்தார். அமைப்பு சாரா மாவட்ட த்தலைவர் சோணைமுத்து, வட்டார தலைவர் சுப்புராயலு, செந்தில்குமார், அமைப்புசாரா மாவட்டச் செயலாளர் முருகன், சீனிவாசன், மாணிக்க மூர்த்தி, அபுதாகிர், லெட்சர்கான், பெரோஸ்கான், காஜா மைதீன், முருகன், பரமசிவம், கருப்பையா, பாஸ்கரன், கணேசன், முருகன், திருவேடகம் சுப்பையா, மேலக்கால் அழகு பிள்ளை, கருப்பட்டி முருகன், தேனூர் பொன்னுச்சாமி, தனிச்சியம் சோணமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சீமானுக்கு எதிராக கண்டன கோச மிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!