13 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த 2010 பேட்ச் காவலர்களுக்கு., நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஆண் பெண்கள் என அனைவரும் இன்று தங்களது பணியில் சேர்ந்த அனுபவங்கள் உள்ளிட்டவைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து சிலர் ஆடல் பாலுடன் நண்பர்களை கண்டு மகிழ்ந்தனர்.மேலும் தங்களது கடந்த கால நிகழ்வுகளை கூறி ஒருவரையொருவர் பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து., நிகழ்ச்சியில் பங்கு பெற்ற காவல்துறையினர் அனைவருக்கும் மதுரை மற்றும் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு ஒன்றுகூடி தங்களது கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு பேசி மகிழ்ந்தனர்.அவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!