எங்கள் வீட்டு சமையலையில் விட்டு போய்ட்டியே” என சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரை கரிமேடு பகுதியில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதனமுறையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவும், மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!