இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு 4000 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161 ன் படி நீண்ட காலமாக சிறைவாசிகளாக இருந்து வருகிற அனைத்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையிலும், நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் மதுரை இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் இருந்து பேரணியாக வந்து மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் சுமார் 4000 அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் தபால் பெட்டியில் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!