முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மீது 2 வழக்குகள் பதியப்பட்டது. அவருக்கான ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!