எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில்பணியில் இருந்த பெண் ஏட்டுமயங்கி விழுந்து பலி.போலீஸ் கமிஷனர் அஞ்சலி

எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண்ஏட்டு மயங்கி விழுந்து திடீரென்று பலியானார். அவரது உடலுக்கு போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.தேனி மெயின் ரோடு எஸ் எம் எஸ் காலனி அமிர்தா நகர் 5வது தெரு வை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி கலாவதி 40 .இவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார்.இவர் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்தது. மயங்கிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி எஸ.ஐ.அழகு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஏட்டு கலாவதியின் உடல் பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உடலுக்கு போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா, துனை கமிஷனர்கள் ,உதவி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!