சோழபுரம் பகுதியில் சுகாதார வளாகம் (கழிப்பறை ) கட்டிடத்தை இடித்ததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் இந்திராணி காலனி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் இவர் அந்த பகுதியில் அனுபவ பாத்தியதை 10 சென்ட் இடத்தைபயன்படுத்தி வந்துள்ளார் இவர் இறந்த நிலையில் இவருடைய பேரன் சக்திவேல் அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார் இதற்கிடையில் சோழபுரம் 21 வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் (கழிப்பறை) கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார் தான் பயன்படுத்தி இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிடத்தை சக்திவேல் எஇதில் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .தகவலறிந்து வந்த ஆய்வாளர்மரியபாக்கியம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சக்திவேல் மற்றும் 7 பேரை காவல் நிலைத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாவரை போராட்டம் தொடரும் என சாலை ஓரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் வழக்கு பதியப் படும் என உத்தரவாதம் அளித்த பின் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!