மதுரையில் எழுத்தாளர் மாரிதாஸ் கைது.

மதுரையில் திருப்பாலையில் உள்ள எழுத்தாளர் மாரிதாஸை போலீஸார் கைது செய்தனர்.வழக்கு ஒன்றில் அவர் செய்தியை மிகைப்படுத்தியதாக கூறி, மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையாளர் சூரக்குமார் தலைமையில் போலீஸார் சென்று மாரிதாஸை கைது செய்ய முயன்றபோது, அவருக்கு ஆதரவாக, மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள், போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும், பா.ஜ.க. தொண்டர்கள், மாரிதாஸ் வீட்டு முன்பாக போலீஸாரைக் கண்டித்து கோஷமிட்டு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனராம்.உடனடியாக போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.இதையடுத்து, மதுரை நகர காவல் துணை ஆணையாளர், பா.ஜ.க. நிர்வாகிகளிடம், கைது குறித்து விபரம் தெரிவித்தராம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!