ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் விடுமுறை வழங்கி தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் உத்தரவு.ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்திருந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த பரிசீலனை (Direction) அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டுள்ளது.உத்தரவின் அடிப்படையில் Surety வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இன்று காலை அல்லது இன்று மாலை ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வருவார் என அவரது வழக்கறிஞர் திருமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!