என்று எரியும் சுரங்க பாதை மின் விளக்கு அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள் அலட்சியத்துடன் செயல்படும் மாநகராட்சி.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி மற்றும் தென்பரங்குன்றம் செல்லும் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த சுரங்கப் பாதையில் மின் விளக்குகள் எதுவும் எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது இதுகுறித்து அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இரவு நேரங்களில் சுரங்கப் பாதையில் செல்வதற்கு அச்சமாக இருப்பதாகவும் இதனால் மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் மேலும் சுரங்கப் பாதையை பயன்படுத்தாமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது ரயில் மோதி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சுரங்கப்பாதையில் மின்விளக்கு எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ஏதேனும் அசம்பாவிதம் நடந்த பிறகுதான் நடவடிக்கை நடக்குமா என கேள்வி????? எழுப்புகின்றனர்…. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!