கலைஞரை போல் சிறப்பாக செயல்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்றுதிறனாளிகளுக்கு ரயில், பேருந்துகளில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை.மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்காக இந்திய அரசின் உயரிய விருதானபத்மஸ்ரீ விருது நேற்று இந்திய ஜனாதிபதி அவர்களின் திருக்கரங்களால் தென்காசி “ஆய்குடி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது டெல்லியில் இருந்து விமானம் மூலம்மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஆய்க்குடி ராமகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுதென்காசி மாவட்டம் ஆய்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68)இவர் பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும்போது 1975ல் கடற்படை உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார் அங்கு அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டு அதன் பிறகு கழுத்துக்கு கீழ் செயல்படாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டாக்டர் அமர் என்பவரின் உந்துதலால் தென்காசி அருகே ஆய்குடி கிராமத்தில் 1981ம் ஆண்டு அமர்சேவா சங்கம் தொடங்கினார் ஆரம்பத்தில் 4 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட அமர்சேவா சங்கம் தற்போது 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கான புத்தகம் தயாரிக்கும் தொழிற்சாலை.4000 பேர் பயிலும் சிவ சரஸ்வதி வித்யாலயா உட்பட பணிகளை அவர் செய்து வருகிறார்.இவரது பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி. தமிழக , மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளார்.மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவையை பாராட்டி குடியரசுத்தலைவரால், “பத்ம ஸ்ரீ “, விருது நேற்று டெல்லியில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த “பத்ம ஸ்ரீ” விருது பெற்ற ஆய்குடி ராமகிருஷ்ணை மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் மற்றும், பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உள்பட பலர் வரவேற்பளித்தனர்.
ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது -மாற்று திறனாளிகளுக்கான சிறந்த சேவைக்காக குடியரச தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கியது பெருமையளிக்கின்றது.பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் என்னிடம் பேசியது மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கிறது.முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக கலைஞரை போல் செயல்படுகிறார். மாற்று திறனாளிகளுக்கான துறையை தனது பொறுப்பில் வைத்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.மேலும் ரயில்நிலையங்கள் பேருந்து நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் மேலும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறினார்.


You must be logged in to post a comment.