வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ததை கண்டித்து பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ததை கண்டித்து மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பா.ம.க மாவட்ட செயலாளர் சண்முக நாதன் தலைமையில் வழக்கறிஞர் முருக கணேசன் உட்பட திரளான பாமகவினர் கலந்து கொண்டு தமிழக அரசு உடனடியாக சட்ட ரீதியாக மேல்முறையீட்டு நடவடிக்கைகளை செய்ய வேண்டும், தங்களுக்கான உரிமையை மீட்டு தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!