அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து ஓய்வுபெற்ற சுங்க துறை அதிகாரியின் மகன் தற்கொலை

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் அக்ரிணி என்னும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 11 மணி அளவில்.. கிருஷ்ணமூர்த்தி வயது33 தந்தை பெயர் வெங்கட சுப்பிரமணியன் சுங்கத் துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி இவருக்கு ஒரே மகனான கிருஷ்ணமூர்த்தி படித்து வேலை இல்லாத காரணத்தினால் அந்த சில நாட்களாகவே சற்று மனநலம் பாதிக்கப் பட்டது போல் இருந்துள்ளார் இந்த நிலையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!